Sunday, February 10, 2008

ஸபர் மாதம் - பீடை மாதமா?

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?
அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை! திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?
இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கு விசா வந்துவிட்டால், விசாவை நிராகரிப்பார்களா? அல்லது வெளிநாடு செல்வதையே நிராகரிப்பார்களா? இப்படி செய்ய துணிவு இல்லாத இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எந்தவித ஆதாரமும் குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கையே என்பது தெரியும்.
இவர்களின் கருத்துப்படி ஸபர் மாதம் ஒரு பீடை மாதம் என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.
பீடை நாட்கள் என்றோ மாதமென்றோ ஒதுக்கி தள்ளிவிட்டு ஸபர் மாதமல்லாத மற்ற நாட்களில், மாதங்களில் நல்ல நாட்கள் என தாங்களாகவே தீர்மானித்து செய்யப்படுகின்ற பல நிகழ்ச்சிகளில் தோல்வி மற்றும் நஷ்டம் ஏற்படுவது இல்லையா? விவாகரத்து பெறுவதும், குழந்தை பாக்கியமில்லாமல் இருப்பதும், தொழில் துறையில் நஷ்டமடைவதும், செல்வ நிலையிலுள்ளவர்கள் வறுமை நிலையை அடைவதும், பலவகை இயற்கையின் சீற்றத்தால் விவசாய பொருட்கள் அழிந்து போவதும் எதனால்? பீடை ஸபர் அல்லாத மற்ற மாதங்களில் செய்யப்படுகின்ற அனைத்து செயல்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லவா? அப்படி வெற்றியை மாத்திரம் அடைந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லையே!.
ஆக யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது. ஒருபக்கம் ஸபர் மாதம் பீடை என்று ஒதுக்கி தள்ளக்கூடியவர்கள் மற்றொரு பக்கம் ஸபர் மாத இறுதியில் செய்யக்கூடிய அனாச்சாரங்களை பற்றிப் பார்ப்போம்.
ஸபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்றழைக்கப்படுகின்ற ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று தமிழகத்தில் பரவலாக ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள் (பொதுவாக நம்மில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் வந்தால் மருத்துவரிடம் காண்பித்து நோய் எதிர்ப்பு மருந்து வாங்கி சாப்பிடுவோம் அல்லவா அதேபோல் ஸபர் மாத பீடையை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துதான் மா இலையின் தண்ணீர்?) இப்படி செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா என்றால் கியாமத் நாள் வரையிலும் அவர்களால் ஆதாரங்களை கொண்டுவர முடியாது என்பதே உண்மை. (அந்த அரபி வார்த்தை என்னவென்று எழுதியவருக்கும் தெரியாது, குடிப்பவருக்கும் தெரியாது, காரணம் எழுதக்கூடியவர்களில் பெரும்பாலானோர் குர்ஆன் வசனங்களை படிக்க-கற்றுக்கொள்வதற்காக மதரஸா சென்ற அந்தந்த ஊர் சிறுவர் சிறுமிகளே என்பது குறிப்பிடத்தக்கது)
அடுத்ததாக ஸபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து (அன்றைய தினத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவர்கள் ஒடுக்கத்து புதனுக்காக மட்டும் சுத்தம் செய்வது மூடநம்பிக்கையையே), கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு (சமைத்து), ஆக சமைத்த சாப்பாட்டையும், ரொட்டியையும் வீட்டில் சாப்பிடுவார்களா என்றால் இல்லை மாறாக, ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என்பது இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு அன்றைய தினத்தில் இவர்களில் ஒரு சிலர் தொடரக்கூடிய பயணம் சினிமா தியேட்டர், பிறகுதான் வீடு இப்படி செய்யக்கூடிய இவர்களுக்கு முஸீபத்துகள் நீங்குமா அல்லது தொடருமா? நன்றாக சிந்திக்கவும். இவர்களில் அதிகமானோருக்கு அன்றைய தொழுகை இருக்காது.இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி குறிப்பிட்ட ஒடுக்கத்துபுதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராக செல்வதும் தியேட்டர்தான். இதுதான் இவர்களுக்கு முஸீபத்துகளை நீக்கும் முறை.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடராக ஒவ்வொரு வருடமும் படுவிமர்சியாக உண்டுகளிக்கவும், கண்டுகளிக்கவும் மேற்கோள் இடுகின்ற சம்பவம் இதுதான் அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துபுதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்றது.
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)
அறியாமை காலத்தவர்களின் அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)
பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.
அன்புள்ள சகோதர-சகோதரிகளே இது ஒரு தீர்க்கமான 'பித்அத்' என்பதை விளங்கி நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையிலிருந்து தவிர்ந்து கொள்ள கீழ்கண்ட நபிமொழியே போதுமானது.வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித்அத்கள், பித்அத்துக்கள் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவைகள்) அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத், ஜாபிர் (ரலி) அவர்கள் ஆதாரம் : புகாரி, முஸ்லிம் மற்றும் நஸாயீ.
மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றியே இந்த 'பித்அத்'தான செயல்கள் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றது.
மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கைபடி ஆடி மாதம் பீடை மாதம் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸபர் மாதத்தை பீடை என்றும் புதுமண தம்பதிகளை பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.
பொழுது போக்கிற்காக ஏதோ ஒரு சின்ன விழா-பண்டிகை என்ற பெயரில் ஆண்களும், பெண்களுமாக வீட்டைவிட்டு வெளியேறி மேற்சொன்ன நிகழ்வுகளை அரங்கேற்றுவது.ஒரு நிகழ்ச்சி இஸ்லாத்தில் முஸ்லிம்களால் நடைமுறைப் படுத்தபடுகின்றது என்றால் அது குர்ஆன், ஹதீஸின் நிழலில்தான் செய்யப்படவேண்டும். ஆக இந்த ஸபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆன்-ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கி இது போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை விட்டொதுக்க வேண்டும்.
இதுபோன்ற சமூக அவலங்களை முஸ்லிம்களை விட்டும் களைவதற்கு கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் முன் வரவேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற பெயரில் பற்பல மேடை சொற்பொழிவுகளையும் வாராந்தோறும் நடைபெறுகின்ற ஜும்ஆ பிரசங்கத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முஸ்லிம்களைவிட்டும் அகற்றிடப் பாடுபட்டால் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒழிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன்.
Islam Kalvi

ஆயுளை‌க் குறை‌க்கு‌ம் உட‌ல் பரும‌ன்!

நீ‌ங்க‌ள் ‌தி‌ன்ப‌ண்ட‌ங்களு‌க்கு அடிமையானவரா? உ‌ங்க‌ளி‌ன் உட‌ல் எடை அ‌திக‌ரி‌த்தா‌ல் ஆயு‌ளு‌ம் 10 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது. ‌பி‌ரி‌ட்டனை‌ச் சே‌ர்‌‌ந்த ஆ‌ய்வாள‌ர்க‌ள் அ‌திக உட‌ல் பருமனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் கு‌றி‌‌த்து ஆ‌ய்வு நட‌‌த்‌தின‌ர். அ‌தி‌ல், உட‌ல் பரும‌ன் எ‌ன்பது புகை‌பிடி‌த்தலை ‌விட அ‌திக பா‌தி‌ப்பை‌த் தரு‌கிறது. அதாவது ஆயு‌ளி‌‌ல் சுமா‌ர் 13 ஆ‌ண்டுகளை‌க் குறை‌த்து ‌விடு‌கிறது எ‌ன்று க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர். ''நமது சோ‌ம்பே‌‌‌றி‌த் தன‌த்‌தினாலு‌ம், அவசர‌த்‌தினாலு‌‌ம் து‌ரித உணவுகளை‌த் தேடு‌கிறோ‌ம். ப‌ற்றா‌க்குறை‌க்கு ‌தி‌‌ன்ப‌ண்ட‌ங்களை‌ச் சா‌‌ப்பிடு‌கிறா‌ம்.
ந‌ம்மை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள நுக‌ர்வோ‌ர் சமூக‌ம், ந‌ம்மை‌ச் சா‌ப்‌பிட‌த் தூ‌ண்டு‌கிறது. அதையே நமது வா‌ழ்‌க்கை முறையாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்‌கிறோ‌ம்'' எ‌ன்று ஆ‌ய்வு‌க் குழு‌வி‌ன் தலைமை‌ப் பேரா‌சி‌ரிய‌ர் டே‌வி‌ட்‌ கி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர். இவ‌ர் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் அர‌சி‌ன் முத‌ன்மை அ‌றி‌விய‌ல் ஆலோசக‌ர் ஆவா‌ர். இவ‌ரி‌ன் குழு‌வி‌‌ல் உ‌ள்ள 250 இள‌ம் அ‌றி‌வியலாள‌ர்க‌ள் இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்றன‌ர். உட‌லி‌ன் உயர‌த்‌தி‌ற்கு‌த் தகு‌ந்த எடை உ‌ள்ளதா என அ‌றிய‌ப் பய‌ன்படு‌ம் BMI (body mass index) அ‌ட்டவணை‌ப்படி 30 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 10 ஆ‌ண்டு குறையு‌ம். 40 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 13 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம். மேலு‌ம், இதய நோ‌ய்க‌ள், ‌நீ‌ரி‌ழிவு ம‌ட்டும‌ல்லாம‌ல் பு‌ற்றுநோ‌‌ய்‌க்கு‌கூட உட‌ல் பரும‌ன் காரண‌மாக இரு‌க்க‌லா‌ம் எ‌ன்று ஆ‌ய்வு முடிவு தெ‌ரி‌வி‌க்‌கிறது. ‌நிறைய நகர‌ங்க‌ளி‌ல் கா‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கி‌ன்றன. அவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌சி‌றிது யோ‌சி‌க்க வே‌ண்டு‌ம். நட‌க்க முடி‌ந்த இட‌ங்களு‌‌க்கு நட‌ந்து செ‌ல்வதே ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் அது ஒரு ந‌ல்ல உட‌ல்ப‌யி‌ற்‌சியாகு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர்.

''இது ‌மிக‌ப்பெ‌ரிய கலா‌ச்சார மா‌ற்ற‌த் தேவை‌க்கு இ‌ட்டு‌ச் செ‌ன்று‌ள்ளது. உட‌ல் பரும‌ன் ‌சி‌க்க‌ல் ஆ‌ண்டி‌ற்கு ஆ‌ண்டு அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. நா‌ம் உடனடியாக‌ச் செய‌ல்பட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று பேரா‌சி‌ரிய‌ர் ‌கி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!

நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையு‌ம், பான‌ங்களையு‌ம் சா‌ப்‌பிடுவத‌ன் மூல‌ம் உட‌ல் பருமனை‌க் குறை‌க்க முடியு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.பெ‌ல்‌ஸ்‌லி, ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி ஆ‌கியோ‌ர் தலைமை‌யிலான ஆ‌ய்வு‌க் குழு‌வின‌ர் குறை‌ந்த கலோ‌ரி அளவு கொண்ட இ‌னி‌ப்பு‌ச் ச‌த்துக‌ள், ச‌‌க்‌தி‌யி‌ன் அட‌ர்‌த்‌தி த‌ன்மை, ‌திரு‌ப்‌தி‌த் த‌ன்மை ஆ‌கியவை‌த் தொட‌ர்பாக நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் இனிப்பு அளவைக் குறை‌த்து‌க் கொ‌ண்டாலே உட‌ல் பருமனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவது எ‌ளிது எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.
குறை‌ந்த கலோ‌ரி ‌‌கொ‌ண்ட இ‌‌‌‌‌னி‌ப்பு உணவுகள் பெரு‌ம்பாலான பான‌ங்க‌ளி‌ன் கலோ‌ரி அளவை பூ‌ஜ்ய‌ம் அளவு‌க்கு குறை‌த்து ‌விடு‌ம். அதே‌ப்போ‌ன்று நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உண‌வி‌ன் கலோ‌ரி ச‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி‌யி‌ன் அளவைய‌ம் குறை‌க்‌கி‌ன்றன. வே‌தி‌ப் பொரு‌ள் கல‌ந்த பான‌ங்களையு‌ம், குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து உ‌ள்ள உணவு வகைகளை அ‌திகமாக சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌ற்போதைய உணவு சா‌ப்‌பிடு‌ம் நெ‌றிமுறையாக இ‌ப்போது உ‌ள்ளது எனவு‌ம் ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி கூ‌றியு‌ள்ளா‌ர்.இத‌ற்கு மு‌ந்தைய ஆ‌ய்வுக‌ளி‌லு‌ம் குறை‌ந்த இ‌னி‌ப்பு ச‌த்து‌க்கொ‌ண்ட உணவு வகைக‌ள் உட‌ல் எடையை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த உதவு‌ம் மு‌க்‌கியமான வ‌ழியாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. மரு‌த்துவ‌ர் ஜா‌ர்‌ஜ் ‌ப்ளா‌க்பே‌ன் நட‌த்‌திய சோதனை‌யி‌ல், குறை‌ந்த கலோ‌ரி கொ‌ண்ட ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் எ‌ன்ற இ‌னி‌ப்பு‌ச் ச‌த்தை உண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டவ‌ர்க‌ளி‌ன் உட‌ல் எடையை க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் தெ‌ரி‌ந்ததாகவு‌ம், கு‌ண்டான பெ‌ண்க‌‌ளி‌ன் உட‌ல் எடையை‌க் ‌நீ‌ண்ட கால அடி‌ப்படை‌யி‌ல் க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் உத‌வியது தெ‌ரிய வ‌ந்ததாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் 20 முத‌ல் 60 வயது ‌நிர‌ம்‌பிய 168 கு‌ண்டு‌ப் பெ‌ண்க‌ள் இர‌ண்டு ஆ‌ண்டு கால‌ம் ஈடுபடு‌த்த‌ப் ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த 168 பெ‌ண்களுமே குறை‌ந்த கலோ‌ரி ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் இ‌னி‌ப்பு‌ச் ச‌த்து‌ப் பொரு‌ள் கல‌ந்த உணவு, பான‌ங்க‌ள் த‌ங்க‌ள் உட‌ல் எடை குறை‌ப்‌பி‌லு‌ம், ‌நீ‌ண்ட கால அள‌வி‌ல் உட‌‌ல் எடையை க‌ட்டு‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்கவு‌ம் உதவவுதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ம‌ற்றொரு ஆ‌ய்‌வி‌ல் ச‌‌க்ராலோ‌ஸ் எ‌ன்ற குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து இ‌னி‌ப்பூ‌ட்டு‌ம் பொரு‌ட்க‌ள் கல‌ந்த உணவை சா‌ப்‌பி‌ட்ட குழு‌ந்தைக‌‌ளி‌ன் நடவடி‌க்கைக‌ள் போதுமான அளவ‌ி‌ற்கு அ‌திக‌ரி‌க்க உத‌வியது‌ட‌ன், குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை கு‌றி‌யீடு குறைவத‌ற்கு‌ம் காரணமாக இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப் ப‌‌ட்டு‌ள்ளது.அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கு‌ண்டானவ‌ர்க‌ளி‌ன் ‌வி‌கித‌த்‌தி‌ற்கு‌ம், த‌ற்போது உண‌வி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள இ‌னி‌ப்பு‌த் த‌ன்மை‌க்கு‌ம், உண‌வி‌ல் ‌நீ‌க்க‌ப்பட வே‌ண்டிய அளவு இ‌னி‌ப்பு‌ச் ச‌த்‌தி‌ன் அளவு‌க்கு‌ம் தொட‌ர்பு இரு‌ப்பதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ள்ளா‌ர். வாடி‌க்கையாள‌ர்களு‌க்கு யா‌ர் சொ‌ல்வதை ந‌ம்புவது எ‌ன்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கி‌ன்றது. சா‌ப்‌பிடு‌ம் அள‌வி‌ல் கலோ‌ரி க‌த்தை குறை‌ப்பது, நா‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் உணவு வகைக‌ளி‌ல் கலோ‌ரி ச‌த்து குறைவானவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்வது, உட‌ற் ப‌யி‌ற்‌சியை அ‌திக‌ரி‌ப்பது ஆ‌‌கிய மூ‌ன்‌று‌ம் உட‌ல் எடையை‌க் குறை‌க்க உதவு‌ம் எ‌ன்று சுகாதார வ‌ல்லுந‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். __._,_.___