Thursday, March 27, 2008

குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!

வியாழன், 27 மார்ச் 2008
புதுதில்லி: கடந்த 2002ல் நரேந்திரமோடி காவிப்படையினரை ஏவி விட்டு முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்தது தெரிந்ததே. இந்த மாபாதகக் கொலைகளைச் செய்த கொலையாளிகளே நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம் என்று தெளிவாக ஒப்புக் கொண்டிருந்த போதும் இது குறித்து இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இப்போது குஜராத் கலவரம் பற்றி மறு விசாரணை நடத்த புதிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
குஜராத்தைச் சேர்ந்த மூத்த இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகள் கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா, CBI முன்னாள் இயக்குநர் R.K. ராகவன், ஓய்வு பெற்ற காவல் இயக்குநர் C.P. சத்பதி ஆகியோர் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெறுவர். அவர்கள் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மனித நேய ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து முனைப்புடன் போராடி வரும் பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா சற்றல்வாட், "கால தாமதமானாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும். குஜராத் காவல் துறை காவிகளின் கூலிப்படையைப் போல செயல்படுவதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை கானல் நீராக இருந்து வந்த நீதி இப்போது கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்று கூறினார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நான்காயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டாலும் போதிய ஆதாரம் இல்லை என ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை குஜராத் காவல்துறை தவிர்த்துவிட்டது எனவும், சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சாட்சிகள் பலர் அரசுக்கு எதிராக சாட்சி அளித்தாலும் பின்னர் வழக்கிலிருந்து பின்வாங்கினர். அவர்கள் மிரட்டப்பட்டதால் இவ்வாறு தடம் பிறழ்ந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து இந்த விசாரணையை குஜராத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்தே சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை ஏற்படுத்தும் முடிவை நீதிபதிகள் அறிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இவ்வறிவிப்பு காவிக்கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முஸ்லிம்களிடையே அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….4

18. யா அல்லாஹ்! என் பார்வையிலும், என் கேள்விப்புலனிலும், என் உடலமைப்பிலும், என் குணத்திலும், என் குடும்பத்திலும், என் உயிர்வாழ்விலும், என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
19. யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!.
20. யா அல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! இழிவு படுத்திவிடாதோ! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! உன் அருளிலிருந்து எங்களை நிராசையற்றவர்களாக ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக!
21. யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களை தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுடைய மார்க்த்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்திவிடாதே! எங்களின் பாவங்களினால் எங்கள்மீது இரக்கம் காட்டாத, உன்னை பயப்படாதவனை எங்கள் மீது பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே!
22. யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் சுவர்க்கத்தைப் பெற்று வெற்றி பெற, நரகை விட்டும் ஈடேற்றம் பெற (அருள் புரியுமாறும்) நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.