Sunday, February 17, 2008

நெல்லிக்குப்பத்தில் பயங்கர தீ விபத்து! 17வீடுகள் நாசம்!! 15 வீடுகள் பலத்த சேதம்!

வரியோர்கள் அதிகம் வாழும் பகுதியான குடிசைப் பகுதிகளில் அடிக்கடி ஏதோ ஒரு காரணத்தால் தீ விபத்துக்கள் ஏற்படுவதும் ஏழைகள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதேப்போன்று சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் அவுலியா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 17 வீடுகள் முற்றிலும் நாசமாகி 15 வீடுகள் பலத்த சேதமடைந்தன லட்சக்கணக்காண உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து நிர்கின்றனர். இச் செய்தி கிடைத்ததும் நெல்லிக்குப்பம் நகர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்களத்திற்கு விரைந்து நிவாரண பணிகளிளும் நிவாரண உதவிகளிளும் ஈடுப்பட்டனர், தொடர்நது ஈடுப்பட்டும் வருகின்றனர்;. ஏதிர்காலத்தில் இதுப்போன்ற தீ விபத்துக்கள் ஏற்படா வண்ணம் வீடுகளை அமைத்து தர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிகளை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சொந்தங்களின் உதவிக்கரங்களை எதிர்நோக்குகின்றது. தொடர்பிற்கு : இசட். சாஹுல் ஹமீது, ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மாவட்ட பொருளாளர்: 9894897890,முஹம்மது யூசுப், நிர்வாகி, அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல், நெல்லிக்குப்பம். 9894234848