Monday, February 25, 2008

நெல்லிக்குப்பத்தில தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து நிதி உதவி

சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் அவுலியா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் முற்றிலும் நாசமாகி பலத்த சேதமடைந்தன. லட்சக்கணக்காண உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து நின்றனர். இச் செய்தி கிடைத்ததும் நெல்லிக்குப்பம் நகர ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் களத்திற்கு விரைந்து நிவாரண பணிகளிளும் நிவாரண உதவிகளிளும் ஈடுப்பட்டனர், தொடர்ந்து ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.டி.ஜே.) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இனைந்து பாதிக்கப்பட்டவரகளுக்கு கடந்த 24.02.2008 அன்று நெல்லிக்குப்பம் அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து பாதிக்கபப்பட்ட 12 குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 8000 வீதம் வழங்கப்பட்டது. மேலும் பொருள்கள் மட்டும் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5500 வீதம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல பலனை தர ஏக இறைவனிடம் நாம் இறைஞ்சுவோமாக!.