Tuesday, June 3, 2008

சிறுபான்மையினர்க்கு இட ஒதுக்கீடுமுதல்வர் கலைஞர் ஆணை

சென்னை, மே 31- கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் விரை வில் களையப்படும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்திருந் தார்கள்.அதனடிப்படையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத் தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் பணியிடங்கள் நிரப்பப் படுவதில் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சிறு பான்மையின ருக்கான தலா 3.5 விழுக்காடு பிரதிநிதித்துவம் உடனடியாகக் கிடைக்க ஏதுவாக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ள தாவது:கிறித்தவ மற்றும் இசுலா மிய சிறுபான்மை சமுதாயத் தினருக்கு தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து 15-9-2007 அன்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல் கள் விரைவில் களையப்படும் என்று முதல் அமைச்சர் கலை ஞர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.அதனடிப்படையில் முதல மைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று நடை பெற்ற கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் துரை முரு கன், மாநில நிர்வாக சீர்திருத்தக் குழுத் தலைவர் நீதியரசர் ஏ.கே.ராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவர் ஆ.மு. காசி விஸ்வநாதன், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் டி.எஸ். சிறீதர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறைச் செயலாளர் என்.வாசு தேவன், சட்டத் துறைச் செய லாளர் தீனதயாளன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது தொகுதி நான்கு போட்டித் தேர்வின் மூலம் நடத்தப்பட்ட தட்டச்சர் மற்றும் சுருக் கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்கள் மற்றும் இதரப் பணியிடங்களை நிரப்புவதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு தலா 3.5 விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்க ஏதுவாக ஆணை பிறப்பித்துள்ளார்கள். இந்த ஆணை உடனடியாக நடை முறைக்கு வருகிறது.
- இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.