Saturday, January 26, 2008

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - அறிமுகம்!

அன்புடையீர்! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்... இம்மடல் தங்கள் அனைவரையும் பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக! இன்ஷாஅல்லாஹ்....
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மக்களிடையே பிரச்சாரத்தின் மூலமாகவும், பிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் வாயிலாகவும் கொண்டுசெல்லவும்., தனிப்பட்ட ஒழுக்ககேடுகள், வட்டி, வரதட்சனை, விபச்சாரம், மது, ஆபாசம் போன்ற சீர்கேடுகளை சமுதாயத்தில் முடிந்தவரை இல்லாது ஆக்கவும். ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களான கல்வி உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லா கடன், இரத்த தான உதவி, திருமண தகவல் மைய்யம,; நூலகங்கள் உருவாக்குதல் போன்ற சமுதாய சேவைபளையும் இயன்ற வரை செய்திடவும், அரசு உதவிகளை உரிய மக்களுக்கு பெற்று தந்திடவும். சமுதாய மக்களுக்கும், நலிந்த மக்களுக்கும் உண்டான உரிமைகளுக்காக போராடவும், அனைத்து மக்களிடையே நல்லினக்கத்தை ஏற்படுத்திடவும் கடலூர் மாவட்டத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில பல்வேறு ஊர்களில் இதன் கிளை அமைப்புகளும் துவங்கப்பட்டுள்ளது. இன்ஷhஅல்லாஹ்,; கிளைகள் இல்லா ஊர்களில் விரைவில் துவங்கப்படவுள்ளது. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க பிரச்சாரங்களுக்கும், சமுதாய சீர்கேடுகளைகலைவதற்;குண்டான அனைத்து முயற்சிகளுக்கும், சமுதாய சேவைகளுக்கும், உரிமை மற்றும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கும் சமுதாய மக்கள் அனைவரும் தங்களின் நல்லாதரவை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி! வஸ்ஸலாம்.
- அன்புடன்.... ஐக்கிய தவ்ஹீத்

No comments: